tamilnadu

img

ஆந்திராவில் நவம்பர் 2 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி 

ஆந்திராவில் வரும் நவம்பர் 2 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டது. கடந்த ஜூன் மாதம் முதல் தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு. கடந்த மாதம் முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. பள்ளி திறப்பு குறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாது என அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த நிலையில், ஆந்திராவில் வரும் நவம்பர் 2 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த அறிவிப்பை அறிவித்தார். இதில், ஒன்று முதல் 9 அம்மா வகுப்பு வரை ஒரு நாளைக்கும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் ஒரு நாளைக்கும் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்திற்கு மட்டுமே இந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. டிசம்பர் மாதம் பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.